கொரோனா தொற்றை அடுத்து நடப்பாண்டில் குறைவடைந்து காணப்பட்ட தங்கத்தின் கேள்வி கோரல் அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த வருடம் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.