தென்னிலங்கை நீர்த்தேக்கங்களில் மனிதர்களை உட்கொள்ளும் மீன் இனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் அதன் முட்டைகளைக் எடுக்கவோ, பயமுறுத்தவோ செய்யும்போது தான் மனிதர்களைக் கடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரன்ஹா” எனப்படும் இந்த ஆபத்தான மீன் இனம் களனி கங்கை, பொல்கொட மற்றும் தியவன்னா ஏரி போன்ற இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சில காலங்களுக்கு முன்பு அலங்கார மீன் இனங்கள் தொழிலுக்காக கொண்டு வரப்பட்ட போது அவற்றுடன் இந்த மீன் இனமும் இருந்திருக்கலாம் என மீன்வளர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி அஜித் குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்களுடனும் இவை நாட்டிற்குள் வந்திருக்கலாம் எனவும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் இந்த மீன் வந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மீன் இனம் தென் அமெரிக்க நன்னீர் நதிகளில் காணப்படுகிறது. சுமார் 20 முதல் 25 வருடங்கள் உயிர் வாழக்கூடியது. சாம்பல், வெள்ளை, நீலம், சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது.
இது, புழு, பூச்சி, நத்தை, ஆமை, தாவர இனங்களை உண்ணக்கூடிய அனைத்துண்ணி ஆகும். வேறு உணவு ஏதும் கிடைக்காதபோது தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும். கூர்மையான பற்கள், வலிமையான தாடைகள் கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.