மனிதர்களை உட்கொள்ளும் ஆபத்தான மீன்வகை இலங்கை நீர் நிலைகளில் கண்டுபிடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனிதர்களை உட்கொள்ளும் ஆபத்தான மீன்வகை இலங்கை நீர் நிலைகளில் கண்டுபிடிப்பு!


தென்னிலங்கை நீர்த்தேக்கங்களில் மனிதர்களை உட்கொள்ளும் மீன் இனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இருப்பினும் அதன் முட்டைகளைக் எடுக்கவோ, பயமுறுத்தவோ செய்யும்போது தான் மனிதர்களைக் கடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


“பிரன்ஹா” எனப்படும் இந்த ஆபத்தான மீன் இனம் களனி கங்கை, பொல்கொட மற்றும் தியவன்னா ஏரி போன்ற இடங்களில்  அடையாளம் காணப்பட்டுள்ளது. 


சில காலங்களுக்கு முன்பு அலங்கார மீன் இனங்கள் தொழிலுக்காக கொண்டு வரப்பட்ட போது அவற்றுடன் இந்த மீன் இனமும் இருந்திருக்கலாம் என  மீன்வளர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி அஜித் குமார தெரிவித்துள்ளார்.


அத்துடன் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்களுடனும் இவை நாட்டிற்குள் வந்திருக்கலாம் எனவும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் இந்த மீன் வந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த மீன் இனம் தென் அமெரிக்க நன்னீர் நதிகளில் காணப்படுகிறது. சுமார் 20 முதல் 25 வருடங்கள் உயிர் வாழக்கூடியது. சாம்பல், வெள்ளை, நீலம், சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது.


இது, புழு, பூச்சி, நத்தை, ஆமை, தாவர இனங்களை உண்ணக்கூடிய அனைத்துண்ணி ஆகும். வேறு உணவு ஏதும் கிடைக்காதபோது தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும். கூர்மையான பற்கள், வலிமையான தாடைகள் கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.