சிங்கப்பூரில் இருந்து எட்டு மாத காலத்திற்கு டீசல் மற்றும் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.
குறித்த காலப்பகுதியானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியாக இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தர கொள்முதல் குழுவின் பரிந்துரைத்தலுக்கு ஏற்ப டீசல் மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்கான தனித் திட்டங்கள் M/s Vitol Asia (Singapore) Pte ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை 1,137,500 +10/-5% பீப்பாய்கள் டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.05) மற்றும் 262,500+ 10/-5% பீப்பாய்கள் டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.001) இறக்குமதி செய்யவுள்ளது.
மேலும், இலங்கை 1,341,000 +10/-5% பீப்பாய்கள் பெற்றோல் (92 Unl) மற்றும் 459,000+10/-5% பீப்பாய்கள் பெற்றோல் (95 Unl) இறக்குமதி செய்யவுள்ளது. (யாழ் நியூஸ்)
குறித்த காலப்பகுதியானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியாக இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தர கொள்முதல் குழுவின் பரிந்துரைத்தலுக்கு ஏற்ப டீசல் மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்கான தனித் திட்டங்கள் M/s Vitol Asia (Singapore) Pte ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை 1,137,500 +10/-5% பீப்பாய்கள் டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.05) மற்றும் 262,500+ 10/-5% பீப்பாய்கள் டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.001) இறக்குமதி செய்யவுள்ளது.
மேலும், இலங்கை 1,341,000 +10/-5% பீப்பாய்கள் பெற்றோல் (92 Unl) மற்றும் 459,000+10/-5% பீப்பாய்கள் பெற்றோல் (95 Unl) இறக்குமதி செய்யவுள்ளது. (யாழ் நியூஸ்)