பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய மிலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளராக செயற்பட்டுள்ளார்.

தற்போது இத்தாலியில் வசிக்கும் சமிந்த என்பவருக்கு நெருக்கமானவர் எனவும் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், இன்று அதிகாலை 3 மணியளவில் முல்லேரியா, தெல்கஹவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.


விகாரைக்கு அருகில் உள்ள நபரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி வீட்டில் உள்ளவர்களை எழுப்பிவிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.