பெற்றோர்களின் பங்களிப்புடன் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெற்றோர்களின் பங்களிப்புடன் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள்!

பெற்றோர்களின் பங்களிப்புடன் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடும் போதே சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆசிரியர் - அதிபர் போராட்டம் குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்த அடுத்த மூன்று நாட்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கு முன்பாகவும் பெற்றோர்களின் பங்களிப்புடன் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் ஏனைய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் வரவு - செலவுத் திட்டத்துக்கு முன்னர் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க தயார் என மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.