நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலியான கண்டியைச் சேர்ந்த சிறுமி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலியான கண்டியைச் சேர்ந்த சிறுமி!

சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு - பாசிக்குடா சுற்றுலா விடுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கண்டி - ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ் அனர்த்தத்தின் போது கண்டி - ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கி மரணமான சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.