இரு திருமணம் செய்துகொள்ளாத ஆண்களுக்கு சிறை!! முதல் மனைவி இரண்டாவது திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தால் அவருக்கும் சிறை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு திருமணம் செய்துகொள்ளாத ஆண்களுக்கு சிறை!! முதல் மனைவி இரண்டாவது திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தால் அவருக்கும் சிறை!!


ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற விநோத சட்டமானது ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள்  இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்வடைந்துள்ளது.


இதனால் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


மேலும் அவ்வாறு  திருமணம் செய்ய மறுக்கும் ஆண்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படுமெனவும், அத்துடன் முதல் மனைவி அவரது கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தால் இருவரும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


எனினும், எரித்திரியன் அரசாங்கத்தின் இந்த முடிவு உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.