அமெரிக்காவில் சடுதியாக மேலும் அதிகரித்த கொரோனா தொற்று - அச்சத்தில் மக்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவில் சடுதியாக மேலும் அதிகரித்த கொரோனா தொற்று - அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஒரே நாளில் 2 ஆயிரத்து 190 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 276 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.

அத்துடன் 2 ஆயிரத்து 190 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி மாத்திரம் கொரோனா காரணமாக ஆயிரத்து 946 பேர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் எளிதாக தொற்றக் கூடிய 65 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.