பட்டினியால் தவிக்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பட்டினியால் தவிக்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்!


2021 ஆம் ஆண்டுக்கான 116 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பசி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.


பெலராஸ், போஸ்னியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று நிலைகளிலும் சிலி மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளிலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.


2020ஆம் ஆண்டு 64 ஆவது நிலையில் இருந்த இலங்கை இவ்வருடம் 65 ஆவது நிலையில் உள்ளது. இலங்கையின் பட்டினி வீதம் மிதமான நிலையில் உள்ளது.


அத்துடன் கடந்த வருடம் 94ஆவது நிலையில் இருந்த இந்தியா இவ்வருடம் 101 ஆவது நிலையில் உள்ளது. இந்தியாவின் பட்டினி வீதம் தீவிரமான நிலையில் உள்ளது.


ஆசிய நாடுகளில் பாகிஸ்தான் 92 ஆவது நிலையிலும், அங்கு பட்டினி வீதம் தீவிரமான நிலையில் காணப்படுகிறது. நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் 76 ஆவது நிலையிலும் உள்ளன. 


இவ்விரு நாடுகளின் பட்டினி வீதம் மிதமான தன்மையில் காணப்படுகிறது.


116 நாடுகளில் சோமாலியா 116 ஆவது இடத்தில் உள்ளது. சோமாலியாவின் பட்டினி வீதம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலைமை அடுத்த ஆண்டும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


116 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் பட்டினி நிலையில் ஒரு நாடு குறைந்தாகவும், ஒரு நாடு மிதமாகவும்,6 நாடுகள் தீவிரமானதாகவும், 04 நாடுகள் ஆபத்தானதாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன் 07 நாடுகளின் தற்காலிக நிலைகள் நிறுவப்படவில்லை. 2020ஆம் ஆண்டு 107 நாடுகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.