நாட்டில் நேற்று மேலும் உயர்ந்த கொரோனா மரணங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நேற்று மேலும் உயர்ந்த கொரோனா மரணங்கள்!



நாட்டில் நேற்றைய தினம் (26) கொவிட் தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளது.


நேற்று உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட எவரும் உயிரிழக்கவில்லை எனவும், 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 8 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 5 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.