முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தை திருத்துவதற்கான முயற்­சி­க­ளுக்கு ஆதரிக்குமாறு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தை திருத்துவதற்கான முயற்­சி­க­ளுக்கு ஆதரிக்குமாறு கோரிக்கை!


ஆண்­களைப் போன்றே பெண்­க­ளுக்கும் மத சுதந்­திரம் அல்­லது நம்­பிக்­கையைப் பின்­பற்­று­வ­தற்கு சம உரிமை உண்டு என்­பதை அங்­கீ­க­ரிக்கும் வகையில், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தை திருத்துவதற்கான முயற்­சி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கிறேன் என மதம் மற்றும் மத ரீதி­யான நம்­பிக்­கை­க­ளுக்­கான சுதந்­திரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் கலா­நிதி அஹமட் சஹீட் தெரி­வித்­துள்ளார்.


"போருக்குப் பின்­ன­ரான இலங்­கையில் முஸ்­லிம்கள்; அடக்­கு­முறை, எதிர்ப்பு, மறு­சீ­ர­மைப்பு” எனும் நூல் வெளி­யீட்டு நிகழ்வு இணைய வழி­யாக நடை­பெற்­ற­போது அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.


அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 


முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் முழு­மை­யான மறு­சீ­ர­மைப்பைக் கொண்டு வரு­வ­தற்கு இலங்­கையின் அமைச்­ச­ரவை கடந்த ஏப்ரல் மாதம் அனு­மதி வழங்­கி­யமை குறித்து நான் அறிவேன்.


முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள மறு­சீ­ர­மைப்­பா­னது முஸ்லிம் பெண்­க­ளுக்கு நீதியை சிறப்­பாக அணு­கு­வ­தற்­கான வழி­மு­றை­களை உள்­ள­டக்க வேண்டும். முஸ்லிம் விவாக விவ­கா­ரத்துச் சட்டம் மற்றும் ஆண்­களை மட்­டுமே கொண்ட காதி நீதி­மன்ற முறைமை, முஸ்லிம் பெண்கள் மீதான உரிமை மீறல்கள் உள்­ளிட்­ட­வற்றை சீர்­தி­ருத்­து­வ­தற்­காக கடந்த 60 வரு­டங்­க­ளாக நீடித்து வரும் போராட்­டத்தில் இது ஒரு முக்­கிய தரு­ண­மாகும். இந்த வாய்ப்பை வீணாக்கக் கூடாது.


அத்­துடன் முஸ்லிம், கண்­டியன், தேச­வ­ழமை உள்­ளிட்ட தனியார் சட்­டங்­களை திருத்­து­மாறும் இவற்றில் உள்ள பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளுக்கு எதி­ரான பார­பட்­ச­மான அம்­சங்­களை நீக்­கு­மாறும் இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கிறேன் என்றார்.


இதே­வேளை முஸ்லிம் சமூ­கத்தின் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்தும் அவர் கருத்து வெளி­யிட்டார்.


“முஸ்லிம் சமூ­கத்­தையும் அவர்­களின் வழி­பாட்­டுத்­த­லங்­க­ளையும் இலக்­கு­வைத்து இடம்­பெற்ற கல­வ­ரத்தைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயி­று­தினப் பயங்­க­ர­வாதத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.


நான் இலங்­கையில் மத­ரீ­தி­யான சிறு­பான்­மை­யி­னரின் மனித உரி­மைகள் நிலை குறித்து தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணித்து, அறிக்­கை­யிட்­டி­ருக்­கின்றேன். அது­மாத்­தி­ர­மன்றி சிறு­பான்­மை­யின சமூ­கத்­திற்கு எதி­ரான வன்­மு­றைகள் மற்றும் வெறுப்­பு­ணர்வை முடி­விற்­குக்­கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் அர­சாங்­கத்தைத் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றேன்.


இனங்­க­ளுக்கு இடை­யி­லான நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் அர­சியல் மற்றும் மதத்­த­லை­வர்­க­ளுக்­குரிய பொறுப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்கும் சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான புரிந்­து­ணர்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன்.


கொவிட் – 19 வைரஸ் பரவல் மனித உரி­மைகள் நிலை­வரம் மேலும் மோச­ம­டை­வ­தற்கு வழி­வ­குத்­தது. குறிப்­பாக விஞ்­ஞா­ன­ரீ­தி­யான நிரூ­பிக்­கப்­ப­டாத நிலை­யி­லும்­கூட, முஸ்லிம் சமூ­கத்தின் மத­ரீ­தி­யான நம்­பிக்­கைக்கு முர­ணான வகையில் கொவிட் – 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழப்­போரின் சட­லங்­களைத் தகனம் செய்­வதைக் கட்­டா­ய­மாக்கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. மேலும் அர­சாங்­கத்தின் கொள்­கை­களை விமர்­சிப்­ப­தையும் மாற்­றுக்­க­ருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தையும் குற்­ற­மாக்­கு­வ­தற்கும் அத்­த­கைய நபர்­கள்­மீது அடக்­கு­மு­றை­களைப் பிர­யோ­கிப்­ப­தற்கும் பயங்­க­ர­வாதத்­த­டைச்­சட்டம் அடிக்­கடி பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. இச்­சட்­டத்­தின்கீழ் நூற்­றுக்கும் அதி­க­மானோர் தன்­னிச்­சை­யான முறையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் அவர்­களில் அநே­க­மானோர் இன-மதரீதியான சிறுபான்மையினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளுமாவர்.


இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப்பேச்சுக்களுக்கு எதிராக செயற்பட்டுவந்த பிரபல சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பயங்கரவாத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


-விடிவெள்ளி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.