சந்தேகத்துக்கிடமான வெள்ளை வேன்? மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னரே முறைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சந்தேகத்துக்கிடமான வெள்ளை வேன்? மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னரே முறைப்பாடு!


தனது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத குழுவினர் வெள்ளை வேனில் வந்ததாகவும், அவர்களது சந்தேகத்துக்கிடமான நடத்தை உயிருக்கு ஆபத்தானது என்று கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்தார்.


சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன் தனது வீட்டின் பின்புறம் உள்ள வீதியில் கடந்த வியாழக்கிழமை காலை வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


வீட்டின் பின்பக்க வாசலுக்கு அருகே வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவர், கேட்டில் பதிக்கப்பட்ட எண்ணை சரிபார்த்து, இதுதான் வீடு என்று கூறியதாகவும், பக்கத்து வீட்டுக்காரர் அதைப் பார்த்து தனக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.


தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.