மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக வெளியான செய்தி!


மேலதிக வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து நிதி அமைச்சர் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் சிலருக்கு இடையில் இன்று (16) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் எதிர்வரும் தினத்தில் சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்று முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மேலதிக வகுப்புக்களை நடாத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.