கத்தார் பயணிக்கவிருக்கும் இலங்கையர்களுக்கான நற்செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தார் பயணிக்கவிருக்கும் இலங்கையர்களுக்கான நற்செய்தி!


முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட இலங்கை பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் கட்டார் நாட்டு அரசு தளர்த்தவுள்ளது.


இந்தியா மற்றும் பல நாடுகளுடன் இலங்கையும் கட்டார் அதிகாரிகளால் விதிவிலக்கான சிவப்பு நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.


பொது சுகாதார அமைச்சினால் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விதிவிலக்கழிக்கப்பட்ட சிவப்பு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 06 முதல் இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரும் அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களும் இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்தகைய பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் கட்டாருக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் பெறப்பட்ட கோவிட் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருக்க வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் கட்டார் வந்து 36 மணி நேரத்துக்குள் பயணிகள் பிசிஆர் பரிசோதனையும் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பொது சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றை கட்டாருக்கு வெளியே ஏற்றிக்கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஹோட்டலில் பிறபொருள் எதிரி பரிசோதனை (Serology Antibody test) நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலதிக தகவலுக்கு...https://thepeninsulaqatar.com/article/03/10/2021/Qatar-Health-Ministry-adds-more-countries-to-exceptional-red-list


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.