சொந்த மனைவியை 500 ரூபாவுக்கு விற்ற கணவன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொந்த மனைவியை 500 ரூபாவுக்கு விற்ற கணவன் கைது!


தான் தொட்டு தாலி கட்டிய மனைவியை 500 ரூபாய்க்கு விற்ற கணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த அதிர்ச்சியான சம்பவம் இந்தியா - குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா கூறுகையில், 


இந்த சம்பவம் தொடர்பில் 21 வயதான இளம்பெண் ஒருவர் எங்களிடம் வந்து ஒரு முறைப்பாடு அளித்திருந்தார். அதில் 'இரு தினங்களுக்கு முன்னர் இரவு 9.00 மணிக்கு லக்கி ஹொட்டலுக்கு நானும் என் கணவரும் சென்றோம்.


அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ. 500 கொடுத்தார், இதையடுத்து என்னை அந்த நபருக்கு விற்றுவிட்டார். பின்னர் அவர் என்னை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சீரழித்தார்' என தெரிவித்துள்ளார்.


முறைப்பாட்டை அடுத்து குற்றவாளியான சோனு சர்மா மற்றும் கணவரான தீராஜ் ஜாங்கிட் போன்ற இருவரையும் பொலிசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


-இந்திய ஊடகம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.