வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் செயற்பாடு திடீர் இடைநிறுத்தம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் செயற்பாடு திடீர் இடைநிறுத்தம்!!


கணினி அமைப்பு செயலிழந்துள்ளதன் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை நாளை (13) முதல் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதன்மைச் செயலாளர் ஜே.எம்.சி. ஜயந்தி விஜேதுங்க தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான கணினி அமைப்பில் அடிக்கடி  ஏற்படும் செயலிழப்புகள் காரணமாகவே அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்காலிக நடவடிக்கையாக 13.10.2021 முதல் 26.10.2021 வரை அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.