பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!


விடுமுறை தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 


எதிர்வரும் வாரங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதால் இவ்வாறான விடயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாண எல்லைகள் 13 இல் 115 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 81 இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 


அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 976 வாகனங்களும், 1,439 பேரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். 


இதேபோன்று மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 931 வாகனங்களும், 1,710 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.


இதன்போது உரிய அனுமதியின்றி பயணிக்க முற்பட்ட 415 நபர்களும், 208 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. 


விடுமுறை தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்றுக்கூடும் நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


எதிர்வரும் வாரங்கள் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறும் வாரங்கள் ஆகும். 


எனவே தற்போதைய விடுமுறை காலத்தில் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருடன் போக்குவரத்துக்களை மேற்கொண்டால் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 


எனவே விடுமுறை நாட்களில் எங்கும் செல்லாது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


-எம்.மனோசித்ரா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.