இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் கட்டார் மத்திய வங்கி ஆளுநர் ஷெயிக் அப்துல்லா பின் சௌத் அல்தானி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கத்தார் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் பொருளாதாரத்திற்கு தடையாக உள்ள கோவிட் தொற்றுத் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் இரு நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.