பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை!

உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக நாட்டில் அத்தியாவசியமான இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமென அதன் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

டொலர்கள் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே சீனி கொள்கலன் இருநூறு கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்தியாவசிய உணவுப் பொருளை கொள்வனவு செய்வதகு ஒரு மாதத்திற்கு குறைந்தது 100-110 மில்லியன் டொலர்கள் செலவாகும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.