இந்த கடத்தல் சம்பவம் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், சந்தேகநபர்கள் பிரதேசவாசிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல்துறைக்கு அறிவிக்க வேண்டாம் என அச்சுறுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட நபரின் மனைவி 1 மில்லியன் ரூபாவை தனியார் வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.
வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.