தோல்வியடைந்த இரண்டு அரையிறுதிப் போட்டியாளர்களுக்கும் தலா $ 400,000 அமெதிக்க டொலர்களும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
ஒட்டுமொத்தமாக, பங்கேற்கும் அனைத்து 16 அணிகளும் பகிர்ந்து கொள்ளும் போட்டிக்கு 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்படும்.
போட்டியின் சூப்பர் 12 கட்டத்தின் போது ஒவ்வொரு வெற்றிக்கும் போனஸ் தொகையை ஐசிசி தொடர்ந்து வழங்கும், இது 2016 உலகக்கிண்ண போட்டியின் போது நடந்தது. சூப்பர் 12 கட்டத்தின் போது அனைத்து 30 போட்டிகளிலும் வெற்றியாளர்களுக்கு 40,000 அமெரிக்க டொலர்களாக, மொத்தமாக 30 போட்டிகளுக்கும் 1,200,000 டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 12 கட்டத்தில் வெளியேறும் அணிகளுக்கு தலா 70,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதோடு, மொத்த தொகை 560,000 டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலாவது சுற்றின் வெற்றியின் போது அணிகளுக்கு வெகுமதி அளிக்க அதே அமைப்பில் தீர்மானிக்கப்பட்டுஅதோடு, 12 போட்டிகளிலும் வெற்றி அணிக்கு 40,000 டொலர்கள் பரிசாக வழங்கப்படும். மொத்தமாக 480,000 டொலர்கள் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் நாக் அவுட் செய்யப்படும் நான்கு அணிகளுக்கும் 40,000 டொலர்கள் வழங்கப்படும். இதற்காக 160,000 டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்று 1 இல் பங்கேற்கும் எட்டு அணிகள் பங்களாதேஷ், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் நடைபெறும் சூப்பர் 12 நிலைக்கு ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
போட்டியின் 2021 பதிப்பிற்கான பரிசுத் தொகையைத் தவிர, ஒவ்வொரு போட்டியின் போதும் நடைபெறும் பான இடைவேளையையும் (Drinks Break) ஐசிசி அறிவித்தது.
இடைவேளையின் கால அளவு 2 நிமிடங்கள் 30 செக்கன்கள் மற்றும் ஒவ்வொரு இன்னிங்ஸின் அரைப்பகுதியில் பான இடைவேளை எடுக்கப்படும். (ஐசிசி)
தமிழாக்கம் : யாழ் நியூஸ்