பாடசாலைக்கு செல்வதாயின் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய 07 விடயங்கள் - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைக்கு செல்வதாயின் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய 07 விடயங்கள் - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரசின் அபாயத்தையும் பரவலையும் கட்டுப்படுத்த ஏழு அத்தியாவசிய ‘பாடங்களை’ எடுத்துரைத்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலைக்கு செல்ல முன், பாடசாலையில் மற்றும் பாடசாலை சென்றதன் பின் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் களங்கத்தை அகற்றவும் முக்கிய குறிப்புகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இலங்கையில் பாடசாலைகள் பல மாதங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுகின்றன.

மாணவர்கள் பாதுகாப்பாக திரும்புவதும், பாடசாலைகளில் பாதுகாப்பாக இருப்பதும் மிக முக்கியமானதொன்று என்று UNICEF தெரிவித்துள்ளது.

நிறுவனத்தால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஏழு அத்தியாவசிய 'பாடங்கள்' பின்வருமாறு:

  1. எப்போதும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை வைத்திருங்கள்.
  2. எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதற்கு முன்னும் பின்னும் குறைந்தது 20 வினாடிகளுக்கு உங்கள் கைகளை அடிக்கடி சவர்க்க்காரமிட்டு தண்ணீரில் கழுவவும்.
  3. பொதுவில் இருக்கும்போது உங்கள் மூக்கு மற்றும் வாயை முகக்கவசத்தினால் மூடவும்.
  4. உங்கள் முழங்கையின் உற்புறத்தில் தும்மல் அல்லது இருமல் வரும்போது பயன்படுத்துங்கள், அல்லது டிசுவைப் பயன்படுத்துங்கள் மற்றும் பயன்படுத்திய டிசுக்களை உடனடியாக ஒரு மூடியுடன் கூடிய தொட்டியில் அப்புறப்படுத்தி, சவர்க்காரமிட்டு கைகளை கழுவவும்.
  5. அனைத்து மேற்பரப்புகளையும் தொடர்ந்து சுத்தமாகவும் சுத்தப்படுத்தவும்.
  6. உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ காய்ச்சல், தொண்டை வலி, இருமல் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், வீட்டிலேயே இருந்து மருத்துவரை அணுகவும்.
  7. கொரோனா வைரஸ் காரணமாக யாரிடமும் பாகுபாடு காட்டாதீர்கள். அன்பாக இருப்போம், பாதுகாப்பாக இருக்க ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.