அதன்படி, அவர்கள் தற்போது பயன்படுத்தும் சீன போன்களை நிராகரிக்குமாறு நுகர்வோருக்கு தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட 5 ஜி மொபைல் போன்களை சோதனை செய்த பின்னர் சீனாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, Xiaomi Mi 10T 5G போன்களின் மென்பொருள் அமைப்பு திறன் ஐரோப்பிய ஒன்றியப் பகுதிக்கு முடக்கப்பட்டுள்ளது, ஆனால் எந்த நேரத்திலும் அதை தொலைவிலிருந்து செயல்படுத்த முடியும்.
Xiaomi தனது போன் மாடலில் தணிக்கை கருவியையும் (censorship tools) உருவாக்கியுள்ளது, மேலும் Huawei மொபைல் போன் மாடலில் பாதுகாப்பு குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, சீன மொபைல் போன்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிதுவேனிய பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. (யாழ் நியூஸ்)