உலகின் மிக உயரமான மக்களாக கருதப்பட்ட மக்களின் சராசரி உயரம் சுருங்கி வரும் காரணம் இது தான்! - வெளியான அதிர்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகின் மிக உயரமான மக்களாக கருதப்பட்ட மக்களின் சராசரி உயரம் சுருங்கி வரும் காரணம் இது தான்! - வெளியான அதிர்ச்சி தகவல்!

உலகின் மிக உயரமான மக்களாக கருதப்படும் நெதர்லாந்து மக்களின் சராசரி உயரம் சுருங்கி வருகிறது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்து மக்களே உலகின் மிக உயரமானவர்கள் என அறியப்படுகின்றனர். 1958-ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பெருமை நெதர்லாந்தைச் சேரும்.

ஆனால், அவர்கள் தற்போது சுருங்கிக்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980-ல் பிறந்த ஆண்களைவிட, 2001-ல் பிறந்த ஆண்கள் சராசரியாக 1 சென்டிமீட்டர் உயரம் குறைவு என நெதர்லாந்து அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேபோல், நெதர்லாந்து பெண்களின் உயரமோ 1.4 சென்டிமீட்டர் குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது உயரமான 19 வயதுடைய ஆண்கள் சராசரியாக 182.9 சென்டிமீட்டர் (6 அடி) உயரமும், பெண்கள் சராசரியாக 169.3 செமீ (5 அடி 7 அங்குலம்) உயரமும் கொண்டவர்களாக உள்ளனர்.

இந்த உயரம் மாற்றத்திற்கு குடியேற்றம் மற்றும் ஏழ்மை, ஆரோக்கியமற்ற விரைவு உணவு உட்கொள்ளும் பழக்கம் உள்ளிட்ட காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.