CCTV: சினிமாவைப் போன்று கார் மேல் ஏறி பொலிஸ் சுற்றிவலைப்பு !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: சினிமாவைப் போன்று கார் மேல் ஏறி பொலிஸ் சுற்றிவலைப்பு !

போதைப்பொருள் வியாபாரி காரில் இரு போதை பொருள் பொதிகளுடம் தப்பிச் சென்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில், ​​பொலிஸ் அதிகாரி ஒருவர் காரின் முற்பகுதியில் (பொன்னெட்டில்) தொங்கி அவரைப் பிடிக்க முயன்ற சம்பவம் ஒன்று நுகேகொட பகுதியில் பதிவாகியுள்ளது. காரில் தொங்கிய குறித்த பொலிஸ் அதிகாரி ஒரு கிலோமீட்டார் தூரம் வரை சென்று வழுக்கி விழுந்துள்ளார்.

பொலிஸ் காவலில் இருந்த நபரான போதைப்பொருட்களை ஒப்படைக்க வந்த முச்சக்கரவண்டி சாரதியும் இச்சம்பவத்தின் நடுவில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

சுற்றிவலைப்பு குழுவில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் துப்பாக்கி இருந்தபோதும் அதனை பயன்படுத்தவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

ராஜகிரிய ஒபேசேகரபுர சந்தியில் நுகேகொட பொலிஸ் இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

காரில் இருந்து கீழே விழுந்ததில் பொலிஸ் அதிகாரியின் தலையில் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, நாரஹேன்பிட்ட பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொலிஸ் அதிகாரியின் தலை மற்றும் கால்களில் தையல்களும் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்த போது முச்சக்கர வண்டியின் சாரதி இரண்டு பொதிகளை போதைப்பொருளை காரின் சாரதியிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்து, காரில் வந்த நபரை கைது செய்ய முயன்ற போது காரின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாகவும், இது ஒரு திரைப்படம் என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறினார்.

இதுபற்றி விசாரித்த போது, ​​சுற்றிவலைப்புக்கு சென்ற சிரேஷ்ட அதிகாரி இது சிறிய சம்பவம் ஒன்றல்ல என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.