நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறுவதற்கான வாய்ப்பு சில நாட்களில் முடிவடையும் என்று அரச மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண தெரிவித்துள்ளார்.
"எந்தவித தடுப்பூசிகளையும் பெறாத 30 வயதுக்கு மேற்பட்ட சிலர் இருக்கின்றனர். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கான தடுப்பூசியினை பெறும் வாய்ப்பினை இழப்பார்கள். மேலும் இன்னும் சில நாட்களில் இவர்களுக்கான வாய்ப்பு முடிவடையும்.
மேலும், 20-30 வயதுகளையுடையவர்கள் கூடிய விரைவில் வந்து தடுப்பூசியைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் ”என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
"எந்தவித தடுப்பூசிகளையும் பெறாத 30 வயதுக்கு மேற்பட்ட சிலர் இருக்கின்றனர். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கான தடுப்பூசியினை பெறும் வாய்ப்பினை இழப்பார்கள். மேலும் இன்னும் சில நாட்களில் இவர்களுக்கான வாய்ப்பு முடிவடையும்.
மேலும், 20-30 வயதுகளையுடையவர்கள் கூடிய விரைவில் வந்து தடுப்பூசியைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் ”என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)