ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட திர்மானங்கள் குறித்து அமைச்சர் வீமல் வீரவன்ச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட திர்மானங்கள் குறித்து அமைச்சர் வீமல் வீரவன்ச!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்-அதிபர் சம்பள ஒழுங்கின்மையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவு இந்தப் பிரச்சினைக்கு மிகவும் நியாயமான தீர்வு என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

அவர் இந்த விவகாரத்தை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவில் உறுப்பினராக இருந்தார்.

அதன்படி, வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் வரை இரண்டு மாதங்களுக்கு ரூ. 5,000 வழங்குவது குழுவின் முன்மொழிவொன்றல்ல என்றும் நிதியமைச்சரின் முன்மொழிவின் படி ஆசிரியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது என்றும் விமல் வீரவன்ச மேலும் கூறினார்.

ஆசிரியர்கள் ரூ. 5,000 பற்றி யோசிக்காமல் குழுவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை ஏற்குமாறு கேட்டுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.