ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!


மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று (25) இரவு இனம் தெரியாத குழு தாக்குதலை மேற்கொண்டனர்.


மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம் பெற்று வந்துள்ளது.


இந்த நிலையில் நேற்றைய தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும், அருட்தந்தை உள்ளடங்களான குழுவினருக்கும் இடையில்  முரண்பாடு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் குறித்த விடயத்தை அறிக்கையிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் நேரடியாக சம்பவ இடத்தில் இருந்து சேகரித்த  தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டார்.


நேற்று சனிக்கிழமை இரவு குறித்த ஊடகவியலாளரின் பண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள அவருடைய வீட்டை சூழ்ந்து கொண்ட இனம் தெரியாத நபர்கள், வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 


குறித்த விடயத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர் அப்பகுதியில் இருந்து தலைமறைவாகி உள்ளனர்.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் உடனடியாக மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.