
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் போட்டி தடை விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு பரிசீலனையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, மீண்டும் வழமைக்கு திரும்பும் பட்சத்தில், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளில் வாய்ப்பளிப்பது குறித்து ஆராய்வதாக அவர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.