சீனி இறக்குமதிக்கு அனுமதி அளிக்காவிட்டால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் சீனிக்கான இறக்குமதி வரியை 25 சதம் குறைத்துவிட்டு தேவைக்கும் அதிகமானளவு சீனி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனவும் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
அதன்விளைவாக சீனி இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது
அதன் பிரகாரம் தற்போது நாட்டில் கையிருப்பில் இருக்கும் சீனி கையிருப்பு எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கே போதுமானதாக உள்ளது.
அத்துடன் நாட்டுக்கு ஒரு மாதத்துக்கான சீனி தேவைப்பாடு 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னாகும். தற்போது கைவசம் இருப்பது சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் தொன் வரையாகும்.
இந்நிலையில் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்காலத்தில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் சீனிக்கான இறக்குமதி வரியை 25 சதம் குறைத்துவிட்டு தேவைக்கும் அதிகமானளவு சீனி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனவும் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
அதன்விளைவாக சீனி இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது
அதன் பிரகாரம் தற்போது நாட்டில் கையிருப்பில் இருக்கும் சீனி கையிருப்பு எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கே போதுமானதாக உள்ளது.
அத்துடன் நாட்டுக்கு ஒரு மாதத்துக்கான சீனி தேவைப்பாடு 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னாகும். தற்போது கைவசம் இருப்பது சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் தொன் வரையாகும்.
இந்நிலையில் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்காலத்தில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.