கண்டி தேசிய போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் முஸ்லிம் வைத்தியர்களினால் சமகால அவசரத் தேவையை கருதி முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கண்டி மாவட்ட ஜமியத்துல் உலமா அதன் பிராந்திய கிளைகளின் உதவியுடன் ரூ.1,221,500/- பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய நிதியை சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் 14/09/2021 அன்று கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் வைத்து கையளிக்கப்பட்டது.
இதன் போது பிரத்தியோகமாக கண்டி கட்டுகலை ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் அfப்ஸல் மரிக்கார் அவர்களின் தனிப்பட்ட அன்பளிப்பாக ரூ 1,278,500/- உடன் ஜமிய்யாவுடைய நிதியையும் இணைத்து மொத்தமாக ரூ 2.5 மில்லியன் பெருமதியான காசோலையை கண்டி மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் மதிப்புக்குரிய அஷ்ஷெய்க் உமர் தீன் அவர்களுடன் இணைந்து கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா செயலாளர் மதிப்புக்குரிய அஷ்ஷேய்க் அப்துல் கfப்பார் அவர்களினாளும், கண்டி மாவட்ட ஜமியத்துல் உலமாவின் உபதலைவர் மதிப்புக்குரிய அஷேய்க் பஸ்லுர் ரஹ்மான் அவர்களினாளும் கௌரவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
முக்கியமாக கண்டி மாவட்டத்தின் பிராந்திய கிளைகளில் ஒன்றான தெஹிஅங்கை ஜமியத்துல் உலமாவின் தலைவர் மதிப்புக்குரிய அஷ்ஷேக் ஷாபி கரீம் அவர்களினதும் அவருடைய சக உலமாக்களினதும் முன்னெடுப்பில் எமது ஊரின் நிர்வாகங்களினதும் ஊர் ஜமாஅத்தினரினதும் ஒத்துழைப்புடன் ரூ 462,000/- நிதி இந்தத் திட்டத்துக்காக திரட்டப்பட்டு கண்டி மாவட்ட ஜமிய்யாவிடம் கையளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்காக எமது ஊரில் உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்தத் திட்டத்தினை முன்னெடுத்த எமது ஊர் ஜமியத்துல் உலமா தலைவர் உட்பட அனைத்து அங்கத்தவர்களுக்கும் அதேபோல் இந்த திட்டத்துக்கு நிதி உதவி புரிந்த ஏனைய பிராந்திய கிளைகளின் தலைவர்கள் உட்பட அங்கத்தவர்களுக்கும் கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவுக்கும் சமூகம் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வசீர் முக்தார்
மக்கள் பிரதிநிதி
இதன் போது பிரத்தியோகமாக கண்டி கட்டுகலை ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் அfப்ஸல் மரிக்கார் அவர்களின் தனிப்பட்ட அன்பளிப்பாக ரூ 1,278,500/- உடன் ஜமிய்யாவுடைய நிதியையும் இணைத்து மொத்தமாக ரூ 2.5 மில்லியன் பெருமதியான காசோலையை கண்டி மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் மதிப்புக்குரிய அஷ்ஷெய்க் உமர் தீன் அவர்களுடன் இணைந்து கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா செயலாளர் மதிப்புக்குரிய அஷ்ஷேய்க் அப்துல் கfப்பார் அவர்களினாளும், கண்டி மாவட்ட ஜமியத்துல் உலமாவின் உபதலைவர் மதிப்புக்குரிய அஷேய்க் பஸ்லுர் ரஹ்மான் அவர்களினாளும் கௌரவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
முக்கியமாக கண்டி மாவட்டத்தின் பிராந்திய கிளைகளில் ஒன்றான தெஹிஅங்கை ஜமியத்துல் உலமாவின் தலைவர் மதிப்புக்குரிய அஷ்ஷேக் ஷாபி கரீம் அவர்களினதும் அவருடைய சக உலமாக்களினதும் முன்னெடுப்பில் எமது ஊரின் நிர்வாகங்களினதும் ஊர் ஜமாஅத்தினரினதும் ஒத்துழைப்புடன் ரூ 462,000/- நிதி இந்தத் திட்டத்துக்காக திரட்டப்பட்டு கண்டி மாவட்ட ஜமிய்யாவிடம் கையளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்காக எமது ஊரில் உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்தத் திட்டத்தினை முன்னெடுத்த எமது ஊர் ஜமியத்துல் உலமா தலைவர் உட்பட அனைத்து அங்கத்தவர்களுக்கும் அதேபோல் இந்த திட்டத்துக்கு நிதி உதவி புரிந்த ஏனைய பிராந்திய கிளைகளின் தலைவர்கள் உட்பட அங்கத்தவர்களுக்கும் கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவுக்கும் சமூகம் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வசீர் முக்தார்
மக்கள் பிரதிநிதி