ஜனாதிபதி தலைமையில் கூடிய கூட்டம்! கோவிட் காட்டுப்பாடுகளை நீக்குவதில் கவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி தலைமையில் கூடிய கூட்டம்! கோவிட் காட்டுப்பாடுகளை நீக்குவதில் கவனம்!


கோவிட் பணிக்குழு தற்போது சுகாதார பரிந்துரைகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பல பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கோவிட் பணிக்குழுவின் கூட்டத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


அதன்படி, வருவாய் ஈட்டும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை படிப்படியாக திறப்பது, கட்டுமானத் தொழிலாளர்களை அழைத்து வர அனுமதி வழங்குதல், கிராமப்புறங்களில் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் தொடக்கங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கான அனுமதி ஆகியவை இதில் அடங்கும்.


ஜனாதிபதி இதற்கான அனுமதியை வழங்கி மேலும் இதுதொடர்பில் காவல்துறை மற்றும் சுகாதார சேவைகளை உன்னிப்பாக கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறினார்.


நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தினசரி வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் பணி வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.


மேலும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து காவல்துறையிடமிருந்து தினசரி அறிக்கை பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு அனுப்புமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், தேவையற்ற நபர்கள் சாலைகளில் நடமாடுவதை, பயணம் செய்வதை நிறுத்துமாறு அவர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.