அத்தியாவசியமற்ற பல பொருட்கள் தொடர்பில் அரசு எடுத்த முடிவு நாட்டின் பொது மக்களை பாதிக்காது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கிட்டத்தட்ட ஒவ்வொரு பொருளும் இறக்குமதி செய்யப்படும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, மக்களின் தேவைகளுக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாத்தளை லக்கலவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய சாலையை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பங்கேற்ற போது இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்தார்.
அரசு எப்பொழுதும் தொழிலதிபர்களின் பக்கத்திற்கு பதிலாக மக்களின் பக்கமே இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.