எதிர்வரும் புதன்கிழமை முதல் இது அமுலுக்கு வருமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் புதன்கிழமை முதல் இது அமுலுக்கு வருமா?


எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களில் நடமாடும் போது தடுப்பூசி அட்டை வைத்திருப்பது கட்டாயமென அரசு கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.


எவ்வாறாயினும் நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத நிலையில் குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.


20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக இவ்வாறு தடுப்பூசி அட்டை வைத்திருக்கும் தீர்மானம் இந்த சூழலில் பொருத்தமானதாக இருக்காது என அரசின் சில உயர்மட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அத்தோடு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடைந்ததும் தடுப்பூசி அட்டை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் சுகாதார பிரிவினர் ஆலோசித்து வருகின்றனர்.


எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களின் நடமாடும் நபர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும் என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


-தமிழன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.