நாட்டின் கடன் சுமையை தீர்க்கும் வளம் இலங்கையில் உண்டு! அமைச்சர் அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் கடன் சுமையை தீர்க்கும் வளம் இலங்கையில் உண்டு! அமைச்சர் அதிரடி!


இலங்கையின் மன்னாரில் மறைந்திருக்கின்ற கனிய வளம் மற்றும் எரிபொருள் ஊடாக நாட்டின் கடன் சுமையின் மூன்று மடங்கிற்கும் அதிகமான இலாபப் பங்கை பெறமுடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.


நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (07) இடம்பெற்ற எரிசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இதனைக்குறிப்பிட்டார்.


267 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிய வளமும், எரிபொருள் வளமும் உள்ளதாகவும், அவற்றை சரியான முறையில் முகாமை செய்யும் பட்சத்தில் அதிக இலாபத்தை இலங்கை அடையலாம் எனவும், அவற்றைப் பயன்படுத்தி நாட்டின் மொத்த கடன் சுமையையும் செலுத்திவிடவும் முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


எரிபொருள் மற்றும் கனிய வளங்களில் 50 வீதத்தை தனியார் துறைக்கு கொடுத்தாலும் அரசாங்கத்திற்கு 133.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.