நாட்டில் வாகன உதிரிப்பகங்களை கொண்டு வாகனங்களை உருவாக்க தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இன்று (07) இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியவந்தது.
இணை அமைச்சரவை செய்தி தொடர்பாளர், அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண, சம்பந்தப்பட்ட அமைச்சரவை குறிப்பு தொழில்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
'தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடியால் நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் அந்நிய செலாவணி நெருக்கடி படிப்படியாக தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அதுவரை தொழில்துறை அமைச்சர் ஒரு அமைச்சரவை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். எமது நாட்டில் வாகனங்களை உதிரிப்பகங்களை கொண்டு வாகனங்களை உருவாக்க தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது தனியார் துறையால் கொண்டு செல்லப்படவுள்ளது' என்றார்.