தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
தென்ஆப்பிரிக்கா அணி 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் விளையாடி வருகின்றது.
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (07) நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்டது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து, 204 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.
தென்ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-1 எனும் வித்தியாசத்தில் தொடரை தன் வசமாக்கியது.