வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்!


அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளைக் கைப்பற்றி அவசரகால விதிமுறைகளின் கீழ் கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது, அங்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


அரிசிக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த போதிலும், சந்தையில் அரிசியின் விலை குறையவில்லை என்று பல அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் உணவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இதற்கான உடனடித் திட்டத்தை வகுக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.