பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்த முடிவு தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்த முடிவு தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் அதிரடி!

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்த முடிவை முழுமையாக ஆதரிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ராவல் பிண்டியில் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நியூசிலாந்து அரசு எச்சரிக்கை செய்ததையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைப் பெரும் சிக்கலில் விட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனமும் தெரிவித்தனர்.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறும்போது, “நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டு நடைபெறாமல் போனது எவ்வளவு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு எடுத்த முடிவை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். வீரர்களின் பாதுகாப்பே முக்கியம்” என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.