சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை கடுமையான சட்டங்களை விதித்து ஒழுங்குபடுத்துவதற்கான நகர்வுகளை கைவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஊடகங்களில் தற்போதைய விதிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எவ்வாறாயினும், சமூக ஊடகங்கள் அல்லது ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சினையை எப்படிச் சிறப்பாகச் சமாளிப்பது என்பதை எமது அரசாங்கம் ஊடகங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று அவர் கூறினார்.
ஏற்கனவே இலங்கை ஆசிரியர் குழு மற்றும் ஒலிபரப்புக் குழுவின் மூலம் ஊடக நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
அனைத்து ஊடகங்களையும் ஒன்றிணைத்து ஊடக நெறிமுறைகள் தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு உடன்பாட்டுக்கு எட்டுவதே தனது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடகங்களால் வெளியிடப்படும் தவறான தகவல்கள் மற்றும் தவறான அறிக்கைகளால் பொதுமக்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்துவது இந்த பிரச்சினைக்கு தீர்வாகாது என்றார்.
இதன் காரணமாக, அரசாங்கம் மற்றும் ஊடகங்கள் ஒன்றிணைத்து ஒரு சிறந்த உடன்பாட்டுக்கு வருவதோடு பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதையும், கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தாமல் இருப்பதையுமே அரசின் குறிக்கோள் என்றார். (யாழ் நியூஸ்)