நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் திருத்தமின்றி இன்று (22) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பிறகு கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்காத வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கவே இந்த சட்டமூலம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.