இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் பொலிஸாரினால் கைது செய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை காயத்திற்கு உட்படுத்தி தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் பொதிகளை பெற்றுக் கொள்வதற்காக இராஜகிரிய - ஒபேசேகரபுர பகுதிக்கு வருகை போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டவேளை அவர் தப்பிச் செல்ல முற்பட்டிருந்தார்.
இதன்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த நபர் பயணித்த காரின் மீது பாய்ந்து அதனை நிறுத்த முயன்ற போதிலும், அவரை கீழே விழவைத்துவிட்டு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.