கொரோனா தொற்றுக்கு இலக்காகி 14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு இலக்காகி 14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!


திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இன்று (22) அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த பாடசாலை மாணவிக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரியில் கல்வி கற்று வந்த, அம்பலாங்கொடை ஹல்வத்துர விலோகொட பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.


உயிரிழந்த மாணவியின் மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.