பிசிஆர் மற்றும் விரைவான ஆண்டிஜன் சோதனைகளை மட்டுப்படுத்த சுற்றறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிசிஆர் மற்றும் விரைவான ஆண்டிஜன் சோதனைகளை மட்டுப்படுத்த சுற்றறிக்கை!

பிசிஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனை ஆகியவற்றை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக, தினசரி அறிக்கையிடப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சமூகத்தில் கொரோனா பரவலை மதிப்பிட முடியாது என்று அதன் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டினார்.

அறிகுறிகளுடைய மற்றும் முதல் தொடர்பாளர்களுக்கான பரிசோதனைகளை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரச் சேவை இயக்குநர் ஜெனரல் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, கொரோனா சோதனைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இதன் மூலம் சமூகத்தில் அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகலாம் என்று தெரிவித்தார்.

அதனடிப்படையில் அதிகாரப்பூர்வ கொரோனா புள்ளிவிவரங்களினால் மட்டுமே கொரோனா பரவலின் சரியான மதிப்பீட்டை வழங்க முடியாது என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.