உலகில் முதல் முதலாக வயது குறைந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகில் முதல் முதலாக வயது குறைந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!


உலக அளவில் முதல்முறையாக, கியூபாவில் 2 வயதுக் குழந்தைகளுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்து பயன்படுத்தப்படுகிறது.

அந்த தடுப்பு மருந்து உலக சுகதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

கியூபாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன், கியூபா, பிள்ளைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் 2 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளமுடியும் என அந்த நாடு அறிவித்திருந்தது.

கியூபாவில் அண்மைய மாதங்களில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அந்நாட்டு சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அங்கு 5,700 பேர் வரை உயிரிழந்திருப்பதோடு இதில் பாதி அளவான உயிரிழப்பு மற்றும் மொத்த நோய்த் தொற்று சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு கடந்த மாதத்தில் மாத்திரம் பதிவானது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.