உலக அளவில் முதல்முறையாக, கியூபாவில் 2 வயதுக் குழந்தைகளுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்து பயன்படுத்தப்படுகிறது.
அந்த தடுப்பு மருந்து உலக சுகதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறவில்லை.
கியூபாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன், கியூபா, பிள்ளைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் 2 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளமுடியும் என அந்த நாடு அறிவித்திருந்தது.
கியூபாவில் அண்மைய மாதங்களில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அந்நாட்டு சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அங்கு 5,700 பேர் வரை உயிரிழந்திருப்பதோடு இதில் பாதி அளவான உயிரிழப்பு மற்றும் மொத்த நோய்த் தொற்று சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு கடந்த மாதத்தில் மாத்திரம் பதிவானது.