VIDEO: இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மணல் கொள்ளை - வெளியான பரபரப்பு செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மணல் கொள்ளை - வெளியான பரபரப்பு செய்தி!

மாலத்தீவில் தீவொன்றை உருவாக்குவதற்காக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணல் எடுக்கப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், மொட்டு சின்ன எம்.பி க்களாலும் இம்மணல் மோசடி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாண ஆளுநரும் இதை ஆதரித்து வருவதாகவும் கூறிய அவர், சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் இன்று வேலை செய்து வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறு சபாநாயகரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது. கிழக்கு மாகாண ஆளுனரின் செயல்பாடுகள் அனைத்தும் முரணாகவுள்ளது. #Shanakiyan #MP #TNA #ITAK #Parliament #Parliament #lka

Posted by Shanakiyan Rajaputhiran Rasamanickam on Tuesday, 7 September 2021


அறிவிப்பு பின்வருமாறு: (சிங்களம்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.