வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்புகையில் நாட்டுக்கு கொண்டு வரக்கூடிய பொருட்கள் தொடர்பில் இலங்கை அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்புகையில் நாட்டுக்கு கொண்டு வரக்கூடிய பொருட்கள் தொடர்பில் இலங்கை அரசு!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இலங்கைக்குத் திரும்பும்போது தனிப்பட்ட நுகர்வுக்காக கொண்டுவரப்படும் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட 623 பொருட்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை சிலர் தவறாக புரிந்து கொண்டதாக சில தனிநபர்கள் கூறும் அறிக்கைகள் காட்டுகின்றன.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும்போது டொஃபி (மிட்டாய்), சாக்லேட் மற்றும் தொலைக்காட்சி  போன்றவை நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று கூறியதை சமூக ஊடகங்களில் காணலாம்.

முந்தைய கட்டுப்பாடுகளைத் தவிர, வெளிநாட்டு பொருட்களை எடுத்து வருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி 623 பொருட்களுக்கு மட்டுமே நிபந்தனைகளை விதித்துள்ளது என்று வெரிடஸ் ரிசர்வ் பொருளாதார நிபுணர் சுபாஷினி அபேசிங்க மேலும் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.