பயங்கரவாத தாக்குதல் நடாத்தபடுவது குறித்து விமான நிலையத்திற்கு கிடைத்த மின்னஞ்சல்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாத தாக்குதல் நடாத்தபடுவது குறித்து விமான நிலையத்திற்கு கிடைத்த மின்னஞ்சல்!!!!

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களையடுத்து கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி இரவு விமான நிலையத்திற்கு கிடைத்துள்ள மின்னஞ்சல் செய்தியையடுத்து இரண்டு சர்வதேச விமான நிலையங்களினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கிணங்க விமான நிலையங்களின் பாதுகாப்பு கடமைகளில் விமானப்படையினர், விசேட பொலிஸ் குழு மற்றும் பொலிஸ் விசேட செயலணியினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஐ.எஸ். ஐ.எஸ் மற்றும் தலிபான் பயங்கரவாத அடிப்படைவாத குழுக்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளமை தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பொலிஸ் உயர் அதிகாரிகள் அனைத்து புலனாய்வுப் பிரிவுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.