சுற்றுலா தடை நீக்கம் தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலா தடை நீக்கம் தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு!


இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதித்திருந்த சுற்றுலா தடையை நாளை (12) முதல் நீக்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.


இதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெற்ற கொரோனா தடுப்பூசிகளை இரண்டு தடவையும் பெற்றிருத்தல் வேண்டும்.


இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.


இதேவேளை, முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளை பெங்கொக்கிற்குள் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அந்த நாட்டு சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெங்கொக் அறிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.