பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியமா?

பொது இடங்களுக்கு செல்லும் போது, தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை சோதனை செய்யும் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை.

தேவை ஏற்படும் பட்சத்தில் எவ்வாறான தீர்மானத்தையும் எட்டுவது குறித்து ஆராயப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்ற எந்தவொரு சுகாதார வழிகாட்டல்களும் தற்போது வெளியிடப்படவில்லை.

எனினும், அவ்வாறான சட்டம் கொண்டுவரப்படும் என தாம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து எதிர்வரும் காலங்களில் ஆராயப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.